பல்லவி
ஸரோஜ த3ள நேத்ரி ஹிம கி3ரி புத்ரீ
நீ 1ப(தா3)ம்பு3ஜமுலே
ஸதா3 நம்மினா(ன)ம்மா ஸு1ப4(மி)ம்மா
ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா
அனுபல்லவி
பாராகு ஸேயக வர தா3யகீ நீ
வலே தை3வமு லோகமுலோ க3லதா3
புராணீ ஸு1க பாணீ மது4கர வேணீ
ஸதா3-ஸி1வுனிகி ராணீ (ஸரோஜ)
சரணம்
சரணம் 1
கோரி வச்சின வாரி(கெ)ல்லனு
கோர்கெ(லொ)ஸகே3 பி3ருது3 க3தா3 அதி
பா4ரமா நன்னு ப்3ரோவ தல்லி
க்ரு2(பா)லவால தாள ஜாலனே (ஸரோஜ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரோஜ/ த3ள/ நேத்ரி/ ஹிம/ கி3ரி/ புத்ரீ/
தாமரை/ யிதழ்/ கண்ணீ/ பனி/ மலை/ மகளே/
நீ/ பத3/-அம்பு3ஜமுலே/
உனது/ திருவடி/ கமலங்களே/
ஸதா3/ நம்மினானு/-அம்மா/ ஸு1ப4மு/-இம்மா/
எவ்வமயமும்/ நம்பினேன்/ அம்மா/ நலன்/ அருள்வாயம்மா/
ஸ்ரீ/ மீனாக்ஷி/-அம்மா/
ஸ்ரீ/ மீனாட்சி/ அம்மா/
அனுபல்லவி
பாராகு/ ஸேயக/ வர/ தா3யகீ/ நீ/
பராக்கு/ செய்யாதே/ வரம்/ அருள்பவளே/ உன்னை/
வலே/ தை3வமு/ லோகமுலோ/ க3லதா3/
போன்ற/ தெய்வம்/ உலகினில்/ உண்டா/
புராணீ/ ஸு1க/ பாணீ/ மது4கர/ வேணீ/
பழம்பொருளே/ கிளி/ யேந்துபவளே/ தேன்வண்டு/ குழலியே/
ஸதா3-ஸி1வுனிகி/ ராணீ/ (ஸரோஜ)
சதாசிவனுக்கு/ ராணியே/
சரணம்
சரணம் 1
கோரி/ வச்சின வாரிகி/-எல்லனு/
கோரி/ வந்தவர்களுக்கு/ எல்லாம்/
கோர்கெலு/-ஒஸகே3/ பி3ருது3/ க3தா3/ அதி/
கோரிக்கைகள்/ அருளும்/ விருது/ அன்றோ (உனக்கு)/ மிக்கு/
பா4ரமா/ நன்னு/ ப்3ரோவ/ தல்லி/
பளுவா/ என்னை/ காத்தல்/ தாயே/
க்ரு2பா/-ஆலவால/ தாள/ ஜாலனே/ (ஸரோஜ)
கருணை/ கடலே/ தாள/ இயலேனம்மா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பதா3ம்பு3ஜமுலே - பாதா3ம்பு3ஜமுலே.
2 - கருணிஞ்சுமனி - கருணிஞ்சமனி.
3 - நினு எந்தோ - நின்னெந்தோ - நினுனெந்தோ : 'நினு', 'எந்தோ' என்ற இரண்டு சொற்களையும் இணைத்தால், இடையில், யகரம் வரும் (நினுயெந்தோ) - னகரம் (நினுனெந்தோ) அல்ல. எனவே 'நினுனெந்தோ' என்பது தவறாகும். 'நின்னெந்தோ' என்பது சரியாகும்.
4 - த3யாவதி நீவு - த3யாவதீ நீவு : இந்த சொற்றொடர், 'நீவு' என்பதுடன் முடிவடைவதனால், 'த3யாவதி' என்றுதான் இருக்கவேண்டும். எனவே, 'த3யாவதீ' என்பது இங்கு தவறாகும்.
5 - ரதி காம காம்யத3 - ரதி காம காம்ய : இவ்விடத்தில், 'ரதி காம காம்யத3' என்பதே மிக்குப் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
5 - ரதி காம காம்யத3 - ரதி, மன்மதனுக்கு விரும்பிதருள்பவள் - சிவன், மன்மதனை, நெற்றிக் கண்ணினால் எரித்தபின், அம்பாள், அவனை (மன்மதனை) உடலின்றி, உயிர்ப்பித்தாள். எனவே, மன்மதனுக்கு, 'அனங்கன்' (உடலில்லாதவன்) என்று பெயர். 'ஸௌந்தர்ய லஹரி'யில் (6-வது செய்யுள்) கூறப்பட்டது -
"மலர் வில், தேன்வண்டு வரிசை நாண், ஐந்து அம்புகள், இளவேனில் மந்திரி, மலையமாருதம் போரிடும் தேர், என உடைத்திருந்தும், மன்மதன் ஒண்டியே. மலைமகளே! உனது கடைக் கண் பார்வையின் கருணையினால், அனைத்துலகினையும் அவன் வெல்கின்றான். "
ஸௌந்தர்ய லஹரி - 6-வது செய்யுள் விளக்கம்.
Top
விளக்கம்